இன்று முதல் 31ஆம் திகதி வரையில நடைமுறையில் இருக்கும் புதிய விதிமுறைகள்
நாட்டில் அமுலில் இருந்த அதிகாரபூர்வமற்ற ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இம்மாதம் 31ஆம் திகதி வரையில் புதிய பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருக்குமென பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் பயணத்தடை கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் அத்தியாவசியக் காரணமின்றி எவரும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாது என்றும், அத்தியாவசியக் காரணத்திற்காக வெளியே செல்வதாயினும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரமே வெளியே செல்ல முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,