ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் மன்னார் விஜயம் (Photos)
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்றைய தினம் (07) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் பேரில் குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், விவசாய அமைப்பு, கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடும் முகமாக குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு தெரிவு
இதேவேளை குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பொதுக்குழு தெரிவும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஓய்வு நிலை ஜெனரல் றனுவ ராஜ கருண ,கிராமிய பொருளாதார
இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் றஞ்சித் குணரெட்ண ,நாடாளுமன்ற
உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் தர்சின், ஐக்கிய தேசிய
கட்சியின் மாவட்ட இணைப்பாளர் பஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



