ஐ.நா.வில் உரையாற்றும் போது கதறி அழுத பலஸ்தீன தூதர்
பலஸ்தீன தூதராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணியாற்றும் ரியாட் மன்சூர், பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை பற்றி உரையாற்றும் போது கண்ணீரை அடக்க முடியாமல் உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
இந்த நிலத்தை அவள் கொல்லப்படுவதற்கு முன் காப்பாற்றுங்கள்,” என அவர் தொடக்கத்திலேயே உருக்கமாக உரையை ஆரம்பித்துள்ளார்.
உயிரற்ற பிள்ளைகள்
வெடிப்பு, தீ, பசிப்பிணி - எங்கள் குழந்தைகளை விழுங்குகிறது’ மார்ச் மாத ஒப்பந்தம் முறிந்து பின்னர் மீண்டும் தீவிரமாகிய தாக்குதல்களைப்பற்றி கூறிய அவர்,
Riyad Mansour, the Palestinian ambassador to the UN, delivered an emotional address to the Security Council, breaking down in tears as he described the ‘unbearable suffering' of Palestinian children amid the ongoing war in Gaza https://t.co/CLQrbA5gSP pic.twitter.com/82D09dqBlt
— Reuters (@Reuters) May 28, 2025
“1,300க்கும் மேற்பட்ட பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பசிப்பிணியால் பல குழந்தைகள் உயிரிழக்கின்றன எனக் கூறிய அவர், “அம்மாக்கள் தங்கள் உயிரற்ற பிள்ளைகளின் உடலைக் கட்டிக்கொண்டு அழுகின்றார்கள்.
காசாவின் குழந்தைகள்
“எனக்கும் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களை இழக்கும் வலியை யாரும் சகிக்க முடியாது” என உரைத்தார்.
காசா குழந்தைகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை.
காசாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களிலும், அகதிகள் முகாமிலும் வாழ்வதைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் எங்கள் மக்களை நேசிக்கிறோம். எங்கள் பிள்ளைகளை நேசிக்கிறோம்.
கதறி அழுத பலஸ்தீனிய தூதர்
இந்த கொடூர தாக்குதல்களில் அவர்களை காண விரும்பவில்லை. நாங்கள் எங்கள் மண்ணில் இருக்கிறோம்.
ரோமப் பேரரசுக்கால ஒலிவ் மரங்களைவிட நாங்கள் ஆழமாகவே வேரூன்றியுள்ளோம். எங்கள் மண்ணை விட்டு அகல மாட்டோம்” என உறுதியுடன் கூறினார்.
இந்தக் குற்றத்தைக் கைவிடச் செய்யுங்கள் என வேதனையுடன் தெரிவித்தார்.

மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற முழுநேர வேலையுடன் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள பெண் News Lankasri
