பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கடந்த 2019ம் ஆண்டு ஒக்டோபர் 17ம் திகதி இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் பின்னர் ஏற்பட்ட கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் பலாலி விமான நிலையம் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 12ம் திகதி இந்திய விமானமொன்றின் வருகையுடன் பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கவுள்ளது.
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam