பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கடந்த 2019ம் ஆண்டு ஒக்டோபர் 17ம் திகதி இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் பின்னர் ஏற்பட்ட கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் பலாலி விமான நிலையம் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 12ம் திகதி இந்திய விமானமொன்றின் வருகையுடன் பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கவுள்ளது.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri