இது வாழ்வா சாவா என்ற தருணம்! அமைதிப்பேச்சுவார்த்தை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர்
இது வாழ்வா சாவா என்ற தருணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பாகிஸ்தான் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.
வாழ்வா சாவா என்ற தருணம்
இந்தநிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை அன்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்று, எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டு, உலகம் அமைதியைக் காண வேண்டும் என்று உங்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது வாழ்வா சாவா என்ற தருணம், "இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்று, எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டு, உலகம் அமைதியைக் காண வேண்டும் என்று உங்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் ஆகியோர் “போரின் தீப்பிழம்புகளை அணைத்ததற்காக” ஷெரீப் அவர்களைப் பாராட்டினார்.
பாகிஸ்தானை நோக்கி புறப்பட்டுள்ள இரண்டு ஈரான் விமானங்கள்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்
பேச்சுவார்த்தை
நாளை, இறைவன் நாடினால், பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களும் பாகிஸ்தானில் இருப்பார்கள் என்று பிரதமர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் தலைமை தங்களால் இயன்ற சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு, இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுவதை உறுதி செய்யும்," என்று ஷெரீஃப் கூறினார். எல்லாம் இறைவனின் கைகளில் உள்ளது.
இன்று காலை, பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்காக விமானத்தில் ஏறிய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், அப்பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி கூறியது போல், ஈரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருந்தால், நாங்கள் நிச்சயமாகத் திறந்த கரத்தை நீட்டத் தயாராக இருக்கிறோம், என்று வேன்ஸ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.