2024இல் நடக்கப்போவது என்ன? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் தொடர்பில் இந்தியாவின் அறிவிப்பு!
காஸ்மீர் தொடர்பில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்தும் முறுகல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 2024-ம் ஆண்டுக்குள் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் சேரும் என்று இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் உறுதி அளித்துள்ளார்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் பட்டீல், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரால்தான் சில விடயங்களை சாதிக்க முடியும். குடியுரிமை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற துணிச்சலான முடிவுகளை பிரதமர் எடுத்துள்ளார்.
இந்தநிலையில் மோடியின் ஆட்சியின்கீழ் 2024-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் மீண்டும் சேரும் என்று பட்டீல் குறிப்பிட்டார்.
1947ம் ஆண்டு இந்தியாவின் காஸ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தாக இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது.


இந்தநிலையில் இந்திய கட்டுப்பாட்டு காஸ்மீரில் 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இதில் 95வீதமானோர் முஸ்லிம்கள், 4 வீதமானோர் இந்துக்களாவர். ஜம்முவில் 30 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இதில் 66 இந்துக்களும் 30 வீத முஸ்லிம்களும் அடங்குவர். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள அசாட் காஸ்மீரில் 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இது 100 வீத சனத்தொகையாகும்.




பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri