இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க எதிர்பார்க்கும் பாகிஸ்தான்
இந்தியாவில் (India) புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்கும் வரை பிரதமர் மோடியை வாழ்த்துவது பற்றி விவாதிப்பது முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் செயலாக இருக்கும் என்று பாகிஸ்தான் (Pakistan) வெளியுறவு அலுவலக பேச்சாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேர்தல் செயல்முறை குறித்து பாகிஸ்தானிடம் எந்தக் கருத்தும் இல்லை.
எனினும் புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்கவில்லை என்பதால், பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது பற்றி பேசுவது உரிய காலத்துக்கு முன்னரான செயலாகும் என்று பேச்சாளர் மும்தாஜ் குறிப்பிட்டுள்ளார்.
நிலுவையில் உள்ள பிரச்சினைகள்
இதேவேளை இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளுடன் நட்பு மற்றும் கூட்டுறவுகளை விரும்புவதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டிற்காக பாகிஸ்தான் எப்போதும் எதிர்பார்க்கிறது.
மேலும், குறிப்பாக ஜம்மு மற்றும் காஸ்மீரின் முக்கிய தகராறு உட்பட அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டை நாங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக பேச்சாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
