பாகிஸ்தானின் பெண் தீவிரவாதிக்காக, பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் மர்ம மரணம்!
அமெரிக்காவில், பாகிஸ்தான் பெண் தீவிரவாதியை விடுவிக்க கோரி 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தவர் உயிரிழந்தார்.
எனினும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்களின் வழிபாட்டு ஆலயமான பெத் இஸ்ரேலுக்குள் நேற்று பிரவேசித்த ஆயுதம் தாங்கிய ஒருவர், அங்கிருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக, கடந்த 2010-ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றினால் 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
இந்தநிலையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர், மரணமானதாகவும் அவரால் பிடித்துவைக்கப்பட்ட 4 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் யார் என்ற தகவலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகவில்லை.





டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan