பாகிஸ்தானின் பெண் தீவிரவாதிக்காக, பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் மர்ம மரணம்!
அமெரிக்காவில், பாகிஸ்தான் பெண் தீவிரவாதியை விடுவிக்க கோரி 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தவர் உயிரிழந்தார்.
எனினும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்களின் வழிபாட்டு ஆலயமான பெத் இஸ்ரேலுக்குள் நேற்று பிரவேசித்த ஆயுதம் தாங்கிய ஒருவர், அங்கிருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக, கடந்த 2010-ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றினால் 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
இந்தநிலையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர், மரணமானதாகவும் அவரால் பிடித்துவைக்கப்பட்ட 4 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் யார் என்ற தகவலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகவில்லை.





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri