பாகிஸ்தானின் பெண் தீவிரவாதிக்காக, பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் மர்ம மரணம்!
அமெரிக்காவில், பாகிஸ்தான் பெண் தீவிரவாதியை விடுவிக்க கோரி 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தவர் உயிரிழந்தார்.
எனினும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்களின் வழிபாட்டு ஆலயமான பெத் இஸ்ரேலுக்குள் நேற்று பிரவேசித்த ஆயுதம் தாங்கிய ஒருவர், அங்கிருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக, கடந்த 2010-ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றினால் 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
இந்தநிலையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர், மரணமானதாகவும் அவரால் பிடித்துவைக்கப்பட்ட 4 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் யார் என்ற தகவலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகவில்லை.











அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
