பாகிஸ்தானின் பெண் தீவிரவாதிக்காக, பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் மர்ம மரணம்!
அமெரிக்காவில், பாகிஸ்தான் பெண் தீவிரவாதியை விடுவிக்க கோரி 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தவர் உயிரிழந்தார்.
எனினும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்களின் வழிபாட்டு ஆலயமான பெத் இஸ்ரேலுக்குள் நேற்று பிரவேசித்த ஆயுதம் தாங்கிய ஒருவர், அங்கிருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக, கடந்த 2010-ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றினால் 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
இந்தநிலையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர், மரணமானதாகவும் அவரால் பிடித்துவைக்கப்பட்ட 4 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் யார் என்ற தகவலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகவில்லை.







இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
