அக்குரேகொட இரட்டை கொலை துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி அக்குரேகொட இரட்டைக் கொலை இடம்பெற்றமைக்கு மறுநாளே ஜிந்துபிட்டியவில் ஐந்து பேரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திலும் நேரடியாகப் பங்கேற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அத்தனகல்ல - மீவல பகுதியைச் சேர்ந்த ரூபஸ் சுரேஷ் என்பவரே இரட்டைக்கொலை சம்பவத்தின் ஒரு துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் தலைவனான 'கரந்தெனிய சுத்தாவின்' பிரதான துப்பாக்கிதாரி என்பது உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்றில் வெளியான தகவல்
இந்த சம்பவங்களை வெளிநாட்டிலிருந்து மல்வான டுட்டு என்பவர் வழிநடத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (20.02.2026) நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

இவர்களுடன் மோதர நிபுண மற்றும் கொண்ட ரஞ்சி ஆகியோரும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
மேலும் அக்குரேகொட கொலைக்கு டி-56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரூபஸ் சுரேஷ் ரிவோல்வரைப் பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளது.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam