மாம்பழ விவகாரம்! - பாகிஸ்தான் மறுப்பு
இலங்கை, மாம்பழங்களை ஏற்க மறுத்துவிட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளுக்கு மாம்பழங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்படும் செய்தியை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று அபாயம் காரணமாக மாம்பழங்களை பெற்றுக் கொள்வதனை பல நாடுகள் நிராகரித்துள்ளன. எனினும், குறித்த நாடுகளுக்கு மாம்பழங்கள் அனுப்பப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் ஹபீஸ் சவுத்ரி, இந்த அறிக்கைகள் "உண்மையிலேயே போலியானவை மற்றும் தவறானவை" என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஒரு நல்லெண்ண அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு உயர்தர மாம்பழங்களை பரிசாக அனுப்பிவருகின்றார்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள், சுகாதார மற்றும் பைட்டோ சானிட்டரி தேவைகள் மற்றும் விமான பயணத்தின் கிடைக்கும் தன்மை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாடுகளின் பட்டியலை வெளியுறவு அமைச்சகம் தயார்செய்கின்றது.
கடந்த ஆண்டு முதல், கோவிட் -19 தொடர்பான நிபந்தனைகளும் பரிசீலனையின் ஒரு பகுதியாககொள்ளப்படுகின்றது. நடப்பு ஆண்டைப் பொறுத்தவரை, செயல்முறை இன்னும் திட்டமிடல் நிலையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.