கடனை பெறுவதற்குப் பாகிஸ்தானும் இலங்கையும் எடுக்கும் முயற்சி
பாகிஸ்தானும் இலங்கையும் தங்களின் நலிவடைந்த பொருளாதாரங்களை உயர்த்துவதற்காக வரி அதிகரிப்பு உட்படத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்புக்களைப் பெறுவதற்கு நெருங்கி வருகின்றன.
6.5 பில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் எடுத்துள்ளது.
இந்தநிலையில், உடன்படிக்கையை எந்த நேரத்திலும் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானிய வர்த்தக அமைச்சர் சையத் நவீத், வொசிங்டனில் வைத்துத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
இந்நிலையில், 2.9 பில்லியன் டொலர் கடன் திட்டத்தைப் பெறுவதற்கு கடன் வழங்குநரான சர்வதேச நாணய நிதியத்தினால் ஒதுக்கப்பட்ட 15 நிபந்தனைப் பணிகளின் பட்டியலை இலங்கை நிறைவு செய்துள்ளது என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையை ஸ்திரப்படுத்த சர்வதேச நாணய நிதிகள் முக்கியமானவை, இலங்கையின் கையிருப்பு இந்த ஆண்டின் முதல் பாதியில் அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த போதுமானதாக இல்லை.
பாக்கிஸ்தானின் கையிருப்பு ஒரு மாதத்திற்கும் குறைவான இறக்குமதியை
மேற்கொள்ளும் அளவிற்குக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
