நெல்லுக்கு விரைவில் உத்தரவாத விலை
இலங்கையில் நெல்லுக்கு விரைவில் உத்தரவாத விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில நாட்களில் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உரிய விலை
விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய விலையை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு முதல் தடவையாக தீர்வு கிடைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் தடவையாக இந்த வெற்றி கைகூட உள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நெல் உற்பத்திக்கான செலவுகளுடன் 30 வீதத்தை அதிகரித்து நெல் விலையை நிர்ணயம் செய்யுமாறு கோரி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நெல் உற்பத்தி
நெல் உற்பத்திக்கான செலவு குறித்து அமைச்சின் ஐந்து நிறுவனங்களினால் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் முழுமையாக உரத்திற்கு செலவிட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த செலவு கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்க முடியும் என நாமல் கருணாரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri