கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கை பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும் போக நெற்செய்கை சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை முரசுமோட்டை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதம் கடந்த நெற் கதிர்கள் நீரில் மூழ்கி தற்பொழுது நெல் மணிகள் துர்நாற்றம் வீசுவதுடன் அவைகளை கைவிட வேண்டிய நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற வெள்ள அனர்த்தங்களில் கடந்த போகங்களிலும் விவசாயிகளின் நெற்செய்கை அழிவுறுவது வழமையாக உள்ளது. ஏற்கனவே ஏற்பட்டிருந்த அழிவுகளுக்கு உரிய நஷ்ட ஈடு பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு
இம்முறை இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகமாக அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக பலரது நெற்செய்கை வயல்கள்நீரில் மூழ்கியுள்ளதாகவும் விவசாயிகளின் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஆரம்பத்திலேயே இரணைமடு குளத்தின் நீரைதிறந்து விடப்பட்டிருக்குமாயின் பல விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் போயிருக்கும் எனவும் தற்பொழுது நெற்செய்கை மேற்கொள்ளபடுவது இயற்கையுடன் பெரும் சவாலாகவே உள்ளது எனவும் விவசாயிகள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இனிவரும் காலங்களிலாவது விவசாய நிலங்கள் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இரணைமடு குளத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்ற மேலதிக நீரை விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நீரை வெளியேற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்துவிட்டு நெல்லுக்கான நிர்ணய விலையும் இல்லாது விவசாயிகள் திண்டாடுவதே வழமையாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
