இலங்கையில் மீண்டும் ஒக்ஸிஜன் தேவை அதிகரிபபு
இலங்கையில் மீண்டும் ஒக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதாக கோவிட் தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒக்ஸிஜன் தேவையுடைய சிகிச்சை பெறும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் கோவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 சத்திர சிகிச்சை கட்டில்களில், 52 கட்டில்களில் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிப்பை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.