லண்டனில் நாமல் ராஜபக்சவின் உரை! ஒக்ஸ்போர்ட் யூனியனின் அதிரடி முடிவு..
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொள்ள இருந்த உரை நிகழ்ச்சியை ஒக்ஸ்போர்டு யூனியனும் ரத்து செய்துள்ளது.
தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இவ்வாறு உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது
இதற்கு முன்,கேம்பிரிட்ஜ் யூனியன் நிர்வாகம் நாமல் ராஜபக்ஸவின் திட்டமிடப்பட்ட வருகையை சில நாட்களுக்கு முன் ரத்து செய்திருந்தது. நாமல் ராஜபக்ஸ, இன்று 23ஆம் திகதி ஒக்ஸ்ஃபோர்ட் யூனியனில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தார்.
ஒக்ஸ்போர்டு யூனியன்
அதேபோன்று கேம்பிரிட்ஜிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இரு நிகழ்ச்சிகளும், பல ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் அமைப்புகளின் விமர்சனங்களைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளமொன்றில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், நாமல் ராஜபக்ஸவை அழைப்பது பொதுமக்கள் பாதுகாப்புப் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட குண்டுவீச்சை புறக்கணிப்பதாகும், போர் ஆயுதமாக அமைப்புசார்ந்த பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டது.
“பத்தாயிரக்கணக்கானோர் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர்” போன்ற குற்றச்சாட்டுகளை உதாசீனப்படுத்துவதாகும் என தமிழ் மாணவர் குழுக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “தமிழ் நிலங்களின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் கலாச்சார நினைவுகளின் அழிப்பு” குறித்தும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டம்
இந்த குற்றச்சாட்டுகள், 26 ஆண்டுகள் நீடித்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தைச் சார்ந்தவை. போர் கால மீறல்களுக்கு பொறுப்பேற்பு மற்றும் நீதிக்காக தமிழ் ஆதரவு அமைப்புகள் சர்வதேச அளவில் தொடர்ந்து போராடி வருகின்றன.

தமிழ் யூத் ஆர்கனைசேஷன் யூகே (TYOUK) வெளியிட்ட அறிக்கையில், நாமல் ராஜபக்ஸ “இனப்படுகொலை அமைப்பின் உறுதியான ஆதரவாளர் எனக் குறிப்பிடப்பட்டார்.
அவரை அழைப்பது “நீதி மற்றும் பொறுப்பேற்பை தொடர்ந்து மறுக்கும் ஆட்சிக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிப்பதாகும்” என்றும், “தமிழ் உயிர் பிழைத்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேதனையான செய்தி அனுப்புவதாகும்” என்றும் அமைப்பு தெரிவித்தது.
நிகழ்ச்சி ரத்தாகுமுன் TYOUK போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. அதேபோன்று Oxford Action for Palestine (OA4P) அமைப்பும் போராட்ட அழைப்பு விடுத்திருந்தது.
நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ஒக்ஸ்ஃபோர்ட் யூனியன் தலைவர் கேத்ரின் யாங், பத்திரிக்கையொன்றுக்கு அளித்த அறிக்கையில், “மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்குவது யூனியனின் அடிப்படை நோக்கமாகும்.
கேம்பிரிட்ஜ் யூனியன்
இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட பல மாணவர்கள் திறந்தவெளியில் கேள்வி கேட்கத் தங்களை பாதுகாப்பாக உணரவில்லை என தெரிவித்தனர். மாற்று வழிகள் பரிசீலிக்கப்பட்டாலும், நேரடி பங்கேற்பு இல்லாதது விவாதத்தின் சாரத்தை பாதிக்கிறது” எனக் கூறினார்.
“முக்கிய தரப்பினர் சமமான நிலைமையில் ஈடுபட முடியாத நிகழ்ச்சி, வலுவான விவாதத்தை உருவாக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார். கேம்பிரிட்ஜ் யூனியனும், “அவசர மற்றும் தீவிர ஆலோசனைகள்” பிறகு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது எனத் தெரிவித்தது.

“இவ்வேளையில் சமநிலை மற்றும் திறந்த விவாதம் நடத்த இயலாது என நாங்கள் நம்புகிறோம்” என்று அந்தநிறுவனப் பேச்சாளர் கூறினார். மேலும், “எந்த நிகழ்ச்சியும் பேச்சாளர்களின் கருத்துக்களை ஆதரிப்பதாகவோ அல்லது விமர்சனமின்றி மேடை அளிப்பதாகவோ கருதப்படக்கூடாது” என்றும் வலியுறுத்தினார்.
முதல் முறை அல்ல
இது ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்பட்ட அழைப்பை ஓக்ஸ்ஃபோர்ட் யூனியன் ரத்து செய்த முதல் முறை அல்ல.

2010ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸக்கு வழங்கப்பட்ட அழைப்பும், எதிர்பார்க்கப்பட்ட பெரிய அளவிலான போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகளைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
அப்போது, இந்த முடிவு இலங்கை அதிகாரிகள் மற்றும் மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri