ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்னாக சென்ற மூவர் தொடர்பில் உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை (Video)
வவுனியா- கல்மடு பூம்புகார் பிரதேசத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 17 திகதி குருநாகல் ஏஜென்சி மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் இன்று. யாழ் ஊடக அமையத்தில் க.சந்திரிக்கா புஸ்பகுமாரி (பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் உறவினர்) என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உறவினர்களின் கோரிக்கை
“கடந்த ஒக்டோம்பர் மாதம் 18ம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் பொலிஸார் ஒரு மாத தவணையில் தீர்வு பெற்றுதருவதாகவும் உறுதி அளித்திருந்த நிலையில் பொலிஸார் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால்தான் ஊடகங்களுக்கு தகவலை வழங்குவதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “குருநாகல் பாணகம பகுதியில் இருக்கின்ற பிரயாண முகவர் ஒருவர் மூலம்
அனுப்பப்பட்ட பெண்களை திருப்பி நாட்டிற்கு அமைக்குமாறு கேட்டபோது, முகவரோ
5லட்சம் பணம் தந்தால் மாத்திரம் திருப்பி நாட்டிற்கு அழைக்கலாம் என
தெரிவித்ததாகவும் பொலிஸார் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என முகவர் கூறியதாகவும்” உறவினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan