ஏற்கனவே வெற்றி உறுதியாகியுள்ளது – அனுரகுமார
ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி உறுதியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமது வெற்றி உறுதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் பாரியளவில் தமக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொள்கையற்ற அரசியல்வாதிகள்
குறிப்பிடத்தக்களவு இடைவெளியில் தாம் வெற்றியீட்டுவது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் நாடாளுமன்றில் பல உறுப்பினர்கள் செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியிட்ட கட்சியை விட்டு தாவி வேறும் கட்சிக்கு ஆதரவளித்து வருவதாகவும் கொள்கையற்ற அரசியல்வாதிகள் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை ஆசனங்கள்
எனவே ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் உடன் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு வலுவான அமைச்சரவை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றிலும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றும் என அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
கருப்பு படத்தில் பினு இறந்துவிட்டாரா, உயிரோடு இருக்கிறாரா? கிளைமாக்ஸ் பற்றி அவரே விளக்கம் Cineulagam