முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய சப்பற உற்சவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2025ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ விஞ்ஞாபனம் 25.06.2025 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் நாளையதினம் சப்பற உற்சவம் சிறப்புற இடம்பெற உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைவு பெற்றிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 2025ஆம் ஆண்டுக்கான மகோற்சப விஞ்ஞாபனம் இடம்பெற்று வரும் நிலையில் 16 நாட்கள் திருவிழாவினை கொண்ட ஆலய திருவிழாவின் 14 வது நாளான நாளை இரவு 9 மணியளவில் (08.07.2025) சப்பற உற்சவம் மிக பிரமாண்டமான முறையில் இடம்பெற இருக்கின்றது.
திருவிழா
எனவே தான்தோன்றீஸ்வரர் ஆலய பக்த அடியவர்கள் அனைவரும் எம்பெருமான் வீதி உலா வருவதனை கண்டு தரிசிக்க முடியும் என திருவிழா உபயகாரர்கள் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நாளை மறு தினம் (09) தேர்த்திருவிழாவும் சிறப்புற இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 8 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
