ஹிருணிக்காவுக்கு எதிரான இளைஞனை கடத்திய வழக்கு: விசாரணைக்கு உத்தரவு
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிபென்டர் வாகனத்தில் இளைஞனை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்குமாறு என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா (Amal Ranaraja) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பின் முதல் சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பாணை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹிருணிக்கா பிரேமச்சந்திர இளைஞனை கடத்தியதாக கூறப்பட்ட சம்பவம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 37 நிமிடங்கள் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri