ரிசாத் மற்றும் பிரேமலாலை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு உத்தரவு
தடுப்பு காவல் உத்தரவின் பேரில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் மற்றும் மரண தண்டனை கைதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் ரிசாத் பதியூதீனை அழைத்து வருவதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளருக்கும், பிரேமலால் ஜயசேகரவை அழைத்து வருவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாருக்கும் நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கடிதங்களை அனுப்பியுள்ளார்.