எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
எரிபொருள் பெற்றுக்கொள்வது, விநியோகிப்பது குறித்து பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய நிலையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது போன்ற விபரங்களுடன் குறித்த அறிக்கையை தயார் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலக் கெடு

எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு ராணுவம், பொலிசார், சுகாதாரத்துறையினர் என்ற ரீதியிலேயே எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் பௌத்த துறவிகளுக்கு எந்தவொரு நாளிலும் வரிசையில் நிற்காது எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ராணுவத்தினரும், பொலிசாரும் வழங்கி வருகின்றனர்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri