தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

TNA M. A. Sumanthiran Law and Order
By Rakesh Feb 13, 2025 03:15 PM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் வரும் ஜூன் மாதம் நான்காம் திகதிக்குத் குறித்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்தத் திகதியில் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும், அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று  திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

[FT6CHKB ]

வழக்கின் பிரதிவாதிகள்

வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்று வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், வழக்கின் பிரதிவாதிகளான சிறீதரன் எம்.பி., குகதாசன் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் வழக்கை முடிவுறுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து இன்றைய விசாரணையில் கடும் விவாதங்கள் இடம் பெற்றன.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Order Issued By The Court Regarding The Tna

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு, அது பற்றித் தாம் ஒரு பிரதிவாதி என்ற முறையில் நீதிமன்றத்திற்கு விவரமாக விடயங்களைச் சமர்ப்பித்து இருக்கையில், மேற்படி மூன்று பிரதிவாதிகளும் கட்சிக்குத் தெரியாமல் - கட்சியை இருட்டில் வைத்துக்கொண்டு - தம்பாட்டில் ஒரு திட்டத்தை, அதுவும் முன்னைய இணக்க ஏற்பாடுகளுக்கு மாறாக முன்வைத்து, இணக்கத்துக்கான வாய்ப்பை வேண்டுமென்றே குழப்பி அடிக்க முயன்றுள்ளனர் என்று பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் தமது தரப்பில் தாமே முன்னிலையானார். கட்சியின் செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் மற்றும் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையானார்.

கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் இரத்தினவடிவில் சார்பிலும் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்

நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்

கட்சியின் மத்திய குழு

சுமந்திரன், சத்தியலிங்கம், குலநாயகம், இரத்தினவடிவேல் ஆகிய பிரதிவாதிகள் கட்சியின் மத்திய குழுத் தீர்மானபடி 156 உறுப்பினர்களுடன் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கான இணக்கத் திட்டத்துக்குத் தாங்கள் சம்மதிக்கின்றார்கள் எனத் தெரிவித்தனர்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Order Issued By The Court Regarding The Tna

அதேசமயம் சிறீதரன், குகதாசன், யோகேஸ்வரன் ஆகியோர் 324 உறுப்பினர்களுடன் கட்சியின் மத்திய குழுவை கூட்டும் திட்டத்தை வலியுறுத்தினர். இதையே ஆரம்பத்தில் பிரதிவாதியான சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்று அவர்கள் மூவர் சார்பிலும் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் தெரிவித்துள்ளார்.

வழக்கின் பிரதிவாதி களுக்கு இடையே கருத்து முரண்பாடு இருப்பதை விசனத்துடன் சுட்டிக்காட்டிய வழக்காளி தரப்பு சட்டத்தரணி, இக்காரணத்தால் இணக்கமான தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அருகி உள்ளன என்றும், வழக்கு விசாரணை நடத்தியே முடிவு காண வேண்டும் எனவும் சுட்டி காட்டினார்.

வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அப்பதவியிலும் இல்லை, அவர் உயிரோடும் இல்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது.

மாவை சேனாதிராஜா 

அதனால், அந்த இடத்துக்குப் பதில் தலைவரின் பெயரை வழக்கில் பிரதிவாதியாகச் சேர்ப்பதா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக வழக்கு ஜூன் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்தத் திகதியில் கட்சியின் பதில் தலைவர் எனக் கருதப்படுபவர் வழக்காளியாகச் சேர்க்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Order Issued By The Court Regarding The Tna

இந்நிலையில் அந்த விடயம் தீர்மானிக்கப்பட்ட பின்னரே வழக்கை விசாரிப்பது குறித்த முடிவை நீதிமன்றம் எடுக்கும் என்றும் கூறப்படுகின்றது.

அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு வர நீண்ட காலம் செல்லும் என்று சட்ட வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US