அரசுக்கு எதிராக ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்! - கொழும்பில் முக்கிய சந்திப்பு
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கூட்டமொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது.
மேற்படி இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் திகாம்பரம், ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்ன உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், நாட்டை நல்வழிப்படுத்துவதற்கும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
நாடு இருள் சூழ்ந்த யுகத்தை நோக்கி நகர்வதாகவும், மீள நாட்டில் வெளிச்சம் உண்டாவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.


புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 27 நிமிடங்கள் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri