தேசிய அரசு பற்றிப் பேசியது எதிர்க்கட்சியினர்தான்: ஐ.தே.க. கூறுகின்றது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய அரசு பற்றிப் பேசவே இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசு உருவாக்கம் பற்றி இப்போது பேசப்படுகின்றது. ஓரிரு நாட்களுக்கு முன் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலும் இது பற்றிப் பேசப்பட்டது. அதில் கலந்துகொண்ட பலர் இது தொடர்பில் கேள்வி எழுப்பினர்.
"நாங்கள் அறிந்த வகையில் ஜனாதிபதி தேசிய அரசு பற்றிப் பேசவே இல்லை" என்று சாகல ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் தேவை
எதிர்கட்சியினருக்கு தான் தேசிய அரசு தேவை" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தேசிய அரசு பற்றிப் பேசியது எதிர்க்கட்சியினர்தான். அவர்களே அது பற்றிப் பேசிவிட்டு இப்போது அரசுடன் இணையப்போவதில்லை என்று சொல்கின்றார்கள் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவைளை கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க, "முழு நாடாளுமன்றமும் அரசாகச் செயற்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
