நாட்டின் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
நாட்டின் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை மருத்துவ சங்கமும், புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நிபுணர் குழுவும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்தும், பொருளாதார நன்மைகளுக்காக பயிர்ச்செய்கை தொடர்பான சட்டங்களைத் தளர்த்துவது குறித்தும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
கஞ்சா பயிர்ச்செய்கை
இதில் இலங்கை மக்கள் பல முனைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் கஞ்சா பயிர்ச்செய்கை நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும் என்று கூறியுள்ள நிபுணர் குழு, இலங்கை மேலும் துயரத்திற்குள் செல்ல முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
