அணுகுண்டை வைத்து பாகிஸ்தான் மிரட்டுகிறதா! இந்தியாவின் பயங்கர ஆயுதம் குறித்தும் தகவல்
நாளுக்கு நாள் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது.
இரு நாடுகளும் இரவு முழுவதும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு இருப்பதனால் இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் முதல் பல எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதற்கிடையில் இந்தியாவும் பாகிஸ்தானின் பல எல்லைகளில் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.
இந்த இரு நாடுகளின் மோதலின் அடுத்த கட்டமாக தற்போது அணுகுண்டு பற்றிய பேச்சுக்களும் பாகிஸ்தானை அழிக்கும் இந்தியாவின் பயங்கரமான ஆயுதம் பற்றிய பேச்சுகளும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் மோதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்து இன்றைய அதிர்வு நிகழ்ச்சி ஆராய்கின்றது.