பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையால் மீண்டும் இரு வான் கதவுகள் திறப்பு
வவுனியா, பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் இரு வான் கதவுகள் மீள திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் (K.Himachal) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த வாரம் பெய்து வந்த கனமழையானது குறைவடைந்துள்ள போதும், வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து வருவதனாலும், தாழ்நிலப்பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து வருவதனாலும் பாவற்குளத்திற்கான நீர்வரத்து மீள அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் அரை அடி ஆழத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய இரு வான் கதவுகளும் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் இரவு வேளை திறக்கபடும்.
குளத்தின் நீர் கொள்ளளவை பேணும் வகையில் குறித்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு பெரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவாக உள்ளது. எனினும் நீர் வழிந்தோடும் பகுதி மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்றவும் எனவும் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam