முதன் முறையாக இலங்கை நீதிமன்றத்தால் அமெரிக்க நிதி நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு
அமெரிக்காவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 8 கணக்குகளை 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதிவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
அமெரிக்காவின் "Binance.com" என்ற நிதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றத்தினால் அமெரிக்க நிதி நிறுவனமொன்றுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இடைநிறுத்த உத்தரவிடப்பட்ட கணக்குகளில் இலங்கை "Onmax DT" தனியார் நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களின் கணக்குகளும் அடங்குகின்றன.
மேலும் அந்த நான்கு பேர் உட்பட அந்த நிறுவனத்தின் ஆறு பணிப்பாளர்களின் வெளிநாட்டு பயணத்தைத் தடைசெய்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அறிவிப்பு
இந்த "Onmax DT" நிறுவனத்தின் இரண்டு கணக்குகள் தொடர்பாக இருவரது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அதன்போது முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு அவர்கள் இருவரின் கைத்தொலைபேசிகள் மற்றும் கணினிகளை, கணினி அவசரகால பதிலளிப்பு நிறுவகத்திடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
'Onmax DT' நிறுவனம் இலங்கையில் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திய இலங்கையின் ஐந்து வங்கிகளில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் பெயரில் உள்ள 57 கணக்குகளை இடைநிறுத்த கடந்த 28ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோத பிரமிட் பரிவர்த்தனைகளில் இந்த நிறுவனம் பயன்படுத்திய தொகை 10 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
