பேய்கள் மரம் ஏறும் நேரத்தில் கையெழுத்திட்ட யுகதனவி உடன்படிக்கை பற்றி பேய்கள் மட்டுமே அறியும்
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நடு இரவில் பேய்கள் மரம் ஏறும் நேரத்தில் கையெழுத்திட்ட உடன்படிக்கையில் உள்ள விடயங்களை பேய்கள் மாத்திரமே அறியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் எந்த நாடும் நாட்டின் மின் விநியோகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது துப்பாக்கியால் செய்யும் விடயங்கள் மாத்திரமல்ல, இதற்கு தண்ணீர், மின்சாரம் உட்பட மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் அடங்கும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri