பெறுமதி சேர் வரி கணக்குகளினை நிகழ்நிலை முறை மூலம் சமர்ப்பித்தல் தொடர்பான பயிற்சிநெறி
கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய வரி ஏற்பாடுகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கான பெறுமதி சேர் வரி(VAT) கணக்குகளினை நிகழ்நிலை முறை மூலம் சமர்ப்பித்தல் தொடர்பான பயிற்சிநெறி இன்று(2025.06.03) நடைபெற்றது.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கின்ற கூட்டுறவு சங்கங்களிற்கு பெறுமதி சேர் வரி(VAT) தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
பயிற்சிநெறி
இதன் வளவாளராக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சி.தெய்வசீலன் கலந்து கொண்டிருந்தார். எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கின்ற கூட்டுறவு சங்கங்களின் பொதுமுகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் A.D.C.C Basnayaka, உதவி ஆணையாளர் எம். சிந்துஜா, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
