பெறுமதி சேர் வரி கணக்குகளினை நிகழ்நிலை முறை மூலம் சமர்ப்பித்தல் தொடர்பான பயிற்சிநெறி
கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய வரி ஏற்பாடுகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கான பெறுமதி சேர் வரி(VAT) கணக்குகளினை நிகழ்நிலை முறை மூலம் சமர்ப்பித்தல் தொடர்பான பயிற்சிநெறி இன்று(2025.06.03) நடைபெற்றது.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கின்ற கூட்டுறவு சங்கங்களிற்கு பெறுமதி சேர் வரி(VAT) தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
பயிற்சிநெறி
இதன் வளவாளராக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சி.தெய்வசீலன் கலந்து கொண்டிருந்தார். எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கின்ற கூட்டுறவு சங்கங்களின் பொதுமுகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் A.D.C.C Basnayaka, உதவி ஆணையாளர் எம். சிந்துஜா, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
