இணைய வழியிலான தகாத தொழில் குறித்து பொலிஸார் எச்சரிக்கை
இலங்கையில் இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி மோசடிகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இந்த இணைய வழி பாலியல் தொழில்கள் ஊடாக இடம்பெறக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய வழியில் விளம்பரங்கள்
சுற்றுலா வீசாக்களில் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களும் இந்த பாலியல் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான இணையதளங்களிலும் மொபைல் செயலிகளின் ஊடாகவும் இணைய வழி பாலியல் தொழில் தொடர்பான விளம்பரங்களை பிரசுரம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி ரகசியமான முறையில் பாலியல் தொழில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த சேவைகள் தற்பொழுது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பாலியல் தொழில் சேவை வழங்கும் தரப்புகள் மோசடிகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இணைய வழியில் விளம்பரங்கள் செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பாலியல் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri