கஹதுடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலி!
கஹதுடுவ - கொரலீம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஹதுடுவ பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு வீரர்களும் பனாகொட இராணுவ முகாமில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இரு வீரர்களும் வெதாரா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
23 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan