பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் சுட்டுப் படுகொலை!
பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெல்வத்த - மீட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் .
இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் 42 வயதுடைய குடும்பஸ்தர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப் படை
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் பதுங்கி இருக்கின்றார் என்று கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர் துப்பாக்கியால் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை நோக்கிச் சுட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் போது சந்தேகநபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர், அண்மையில் காலி, கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் : தொடர்ந்து ஒலிக்கும் சைரன்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 8 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
