நுவரெலியாவில் யானை தாக்குதல்: ஒருவர் பலி
நுவரெலியாவில் யானை தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் இன்று(26) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியே ஆணொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம்
வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே குறித்த நபர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(26) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலையில் தீ விபத்து: எரிந்து சாம்பலாகிய மருந்துகள்(Photo) |