லொறியில் சிக்கி நபரொருவர் பலி! சாரதி தலைமறைவு
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் லொறியொன்றில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி அங்கிருந்து தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 1 நாள் முன்

இந்தியா அளித்த அதிர்ச்சி வைத்தியம்... சீனா, துருக்கியிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

வலுவான ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்கலாம்... உக்ரைனுக்கு கட்டுப்பாடுகளை நீக்கிய மேற்கத்திய நாடுகள் News Lankasri
