குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலி: பளையில் சம்பவம்
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (03.09.2023) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் 34 மற்றும் 31 வயதுடைய பளை மற்றும் அரியாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - கஜீ
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam