வவுனியாவில் கோவிட் தொற்றால் இரு பெண்கள் மரணம்
வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கோவிட் தொற்று நோயால் இன்று மரணமடைந்துள்ளார்.
குறித்த முதியவர் சிறுநீரகத்தில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
வவுனியா, சூடுவெந்தபுலவை சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையின் குருதிச்சுத்திகரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
அத்துடன், வவுனியா, சகாயாமாதாபுரம், வைரவர் கோவிலடி பகுதியில் வசித்து வந்த
நிலையில் அவர்களது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஏழு
பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட
நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே குறித்த ஏழு பேரில் பெண்
ஒருவர் மரணமடைந்துள்ளார்.