செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு! (Photo)
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
24 வயதுடைய விவேகாந்தன் வேணிலவன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம்
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கிணற்றில் விழுந்துள்ளது. குறித்த நாயை மீட்பதற்காக இளைஞர் பாதுகாப்பற்ற கிணற்றில் தும்புக் கயிறைப் பயன்படுத்தி இறங்கியுள்ளார். இதன்போது கயிறு அறுந்ததால் அவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
சேற்றில் மாட்டிக்கொண்டமையால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அயலவர்களின் உதவியுடன் கிணற்று நீர் இறைக்கப்பட்டு இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
May you like this Video

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை:7 வயது மகனுடன் தாய் எடுத்த வேண்டாத முடிவு! News Lankasri
