மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் யாழ். இளைஞன் உயிர்மாய்ப்பு
புதிய இணைப்பு
மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் உயிரிழந்த இளைஞன், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
ஜோன் ஜெத்தா என்ற குறித்த இளைஞன் 32 வயதுடைய திருமணமாகாத நபர் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இளைஞனின் சடலம் நீதிபதியின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இளைஞனின் மரணத்திற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
முதலாம் இணைப்பு
மன்னார் - வைத்தியசாலை வளாகத்தில் இளைஞரொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இன்று காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபரீத முடிவு
மன்னார், வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் இளைஞரொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இளைஞனின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.
மேலும், நேற்றையதினம் இரவு குறித்த நபர் இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல் - ராஜூகரன்
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
