தெல்லிப்பழை பொலிஸாரால் ஹெரோயினுடன் ஒருவர் கைது
தெல்லிப்பழை பொலிஸாரால் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
இன்று (28) மாலை, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் 5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் ஹெரோயினை எடுத்துச் செல்லும் போதே சுன்னாகத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம் யாழ். உச்ச நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.