நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு கைது நடவடிக்கைகள் (Photos)
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (18) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பளையில் வெடிப்பு சம்பவம் (Photos) |
பொலிஸார் மீட்பு நடவடிக்கை
இதன் போது கழற்றிய நிலையில் 910 கிராம் வெடிமருந்து மற்றும் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்படுள்ளன.
இதனையடுத்து சந்தேகநபரை இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை
பருத்தித்துறை நகர் பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸாரின் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தருமபுர
தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி நான்கு மாடுகளை ஏற்றி சென்ற வாகன சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றையும், நான்கு மாடுகளையும் தருமபுர பொலிஸார் இன்றைய தினம் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வாகன சாரதியை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
குறித்த நபரை எதிர்வரும் 25 .08.2022 அன்று நீதிமன்றில் முற்படுத்த தர்மபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,மாடுகளை பராமரிப்பதையும் தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.