ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேருக்கு பாதிப்பு: WHOவெளியிட்ட பகீர் தகவல்கள் -செய்திகளின் தொகுப்பு (Video)
உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் 150வது அமர்வின் தொடக்கத்தில் உரையாற்றிய அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Tedros Adhanom Caprese) கோவிட் குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
தொற்றுநோய் எவ்வாறு பரவும் என்பது குறித்தும், கடுமையான கட்டம் எவ்வாறு முடிவடையும் என்பதற்கு வெவ்வேறு காட்சிகள் உள்ளன. ஆனால் இது ஆபத்தானது. ஒமிக்ரான் கடைசி மாறுபாடாக இருக்கும் என்றும் நாம் தொற்று நோயின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம் என்று கருதுவது ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.
9 வாரங்களுக்கு முன்பு Omicron முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, 80 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,