தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் பாடசாலை மாணவி
கல்வி அமைச்சினால் நாடாத்தப்பட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் நயோலின் அப்றியானா என்ற மாணவி 2ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
பிரிவு 8,9இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி அ. நயோலின் அப்றியானா நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று மன்னாரில் வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
சிறந்த சாதனை
இவருக்கான சான்றிதழ் கல்வி அமைச்சகத்தில் நேற்று (20.06.2025) கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் கௌரவ மதுர செனவிரத்னவால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அதேவேளை, இவருடன் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் இரண்டு நிலைகளைப் பெற்றுக்கொண்டனர்.
மன்னார் மறைமாவட்டம் சார்பாக சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவி அ. நயோலின் அப்றியானாவை பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர் அனைவரையும் வாழ்த்துக்கள் கூறி பாராட்டியுள்ளனர்.












ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 21 மணி நேரம் முன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
