கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தாய் பரிதாப மரணம்
அவசர சிகிச்சைக்காக நேற்று முன்தினம் (26) ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபத் தாய், நிபுணத்துவ மயக்க மருந்து நிபுணர் ஒருவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வந்து தேவையான சிகிச்சைகளை வழங்க முடியாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை வைத்தியர் ஒருவரின் தாயார் ஆகும்.
குழந்தையும் மரணம்
வைத்தியசாலையில் 04 விசேட மயக்க மருந்து நிபுணர்கள் இருந்தும் அவர்களில் ஒருவரை கூட குறித்த நேரத்தில் கடமைக்காக அழைத்து வர முடியாத காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், ஒரு வாரத்திற்கு முன்பு, விஞ்ஞானமற்ற அறுவை சிகிச்சை திட்டமிடல் மற்றும் தேவையான நேரத்தில் மயக்க மருந்து நிபுணர் இல்லாததால் ஒரு குழந்தையும் இறந்துள்ளது.
குழந்தை இறந்த போது அறுவை சிகிச்சையின் போது பணியில் இருக்க வேண்டிய 4 மயக்க மருந்து நிபுணர்களில் இருவர் அந்த நேரத்திலும் மருத்துவமனையில் இல்லாமல் அந்த மரணம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 23 நிமிடங்கள் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
