க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தயாரான மாணவன் பரிதாபமாக மரணம்
நிகவெரட்டிய, கிவுலேகம பகுதியில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த தும்புள்ள மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் நிம்சாரா அபிமான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவன் இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை
மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதற்காக மாணவன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்றதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் மீதான பிரேத பரிசோதனை நிக்கவெரட்டிய பிரதேச மரண விசாரணை அதிகாரி ரஞ்சித் தர்மசிறியினால் நிக்கவெரட்டிய ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
