சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அழகியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சைகள் 09.07.2024 முதல் 19.07.2024 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதில் 169,007 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகியல் பாடத்தின் இறுதிப்பெறுபேறுகள்
அழகியல் பாடத்தின் இறுதிப் பெறுபேறுகளை நிர்ணயம் செய்வதற்கு எழுத்து மூல பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை ஆகிய இரண்டிலும் பெறப்பட்ட மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுவதால் இதில் தோற்றுவது கட்டாயம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு பகுதிகளிலும் தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு அந்தப் பாடம் தொடர்பான பெறுபேறுகள் வழங்கப்படமாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
Box office: 17 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ Cineulagam