சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் விபத்தில் படுகாயம்
பலாங்கொடை - வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பரீட்சை முடிந்து பேருந்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
பலாங்கொடை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர்த் திசையில் பயணித்த இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தின் போது லொறியில் இருந்த சில இரும்புக் கம்பிகள் பேருந்திற்குள் வீசப்பட்ட நிலையில், பேருந்திற்குள் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த மாணவி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லொறியின் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
