சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் விபத்தில் படுகாயம்
பலாங்கொடை - வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பரீட்சை முடிந்து பேருந்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
பலாங்கொடை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர்த் திசையில் பயணித்த இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தின் போது லொறியில் இருந்த சில இரும்புக் கம்பிகள் பேருந்திற்குள் வீசப்பட்ட நிலையில், பேருந்திற்குள் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த மாணவி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லொறியின் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam