வெளியாகியுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறு : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 13,588 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிறந்த பெறுபேறுகள்
இதேவேளை, பெறுபேறுகளின் அடிப்படையில் 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவி ஒருவரும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவரும் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு றோயல் கல்லூரியை சேர்ந்த மாணவன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் நான்காம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கம்பஹா ஹோலி க்ரொஸ் கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்கள் பிடித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
